Skip to main content

''அவர்கள் எங்களது எதிரிகள் அல்ல'' - மாவோயிஸ்ட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

Published on 07/04/2021 | Edited on 07/04/2021

 

 They are not their enemies '' -  call for talks

 

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர், கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், கடந்த 03/04/2021 அன்று, அதிரடியாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு வீரர் காணவில்லை, அவரை தேடும் பணி தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என மாவோயிஸ்ட்டுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவோயிஸ்ட்டுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சிறை பிடித்த ஒரு வீரரை விடுவிக்க, மத்திய அரசுடன்  பேச்சுவார்த்தைக்குத் தயார். பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும். காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் எங்களது எதிரிகள் அல்ல. பாதுகாப்பு படையினருடனான சண்டையில் எங்கள் தரப்பில் 4 பேர் இறந்துள்ளனர்' என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்