Skip to main content

சபரிமலை விவகாரம்; வழக்கு விசாரணையை முடித்தது உச்சநீதிமன்றம்...

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

bgcxvb

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 22-ம் தேதி இந்த சீராய்வு மனு மீதான விசாரணை நடக்கும் என நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்க விசாரிக்கும் அமர்வில் இருந்த நீதிபதி மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் இருந்ததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம். அனைத்து தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

 

 

சார்ந்த செய்திகள்