Skip to main content

"இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது" - ராகுல் காந்தி விமர்சனம்...

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா பரவலில் "மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலை கொடுக்கப் போகிறது" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

rahul gandhi on corona virus

 

 

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 1,98,214 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 8000 ஐ கடந்துள்ளது. இந்த வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 148 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "விரைவான நடவடிக்கைதான் கரோனா வைரசைக் கையாள்வதற்கான சரியான வழி. மத்திய அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப் பெரிய விலையைக் கொடுக்கப் போகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்