Skip to main content

விபத்தைத் தடுக்க ப்ரியா வாரியர் - குஜராத் போலீசின் குறும்பு!

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற படத்திலிருந்து வெளியான 'மாணிக்க மலராய' பாடலில் ஒரு காட்சியில் ப்ரியா வாரியர் என்ற இளம் நடிகை, தன் புருவத்தையும் கண்களையும் அசைத்து மௌன மொழியில் பேசுவார். ப்ரியா வாரியர் கண் அசைத்தது ஒரு பையனுக்குத்தான். ஆனால் அந்தக் கண் அசைவு ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களின் மனதையும் கட்டிபோட்டுவிட்டது. சமூகவலைத்தளத்தில் ஒரு இரவில் பிரபலமானவர்கள் பட்டியலில்  ப்ரியா வாரியர் இணைந்தார்.

 

Priya varrier - traffic police



நாட்களாகிவிட்டது, ஒரு வழியாக ப்ரியா வாரியரின் தாக்கம் முடிந்தது என்று நினைத்தால் தற்போது குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா நகர் போலீசாரையும் அந்த கண்ணசைவு கவர்ந்துள்ளது. அவர்கள் சாலை விபத்துகளை தவிர்க்க ப்ரியா வாரியர் கண்ணடிப்பது போன்ற படத்தைப் போட்டு, அதில் "விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும். எந்தவொரு கவனச் சிதறலும் இல்லாமல் கவனமாக வண்டி ஒட்டவும்" என்ற விளம்பரத்தை சிக்னல்களில் வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

 

Kolaveri ad



இதே போன்று தனுஷின் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் வெளியான பொழுதும் இதே போன்ற விழிப்புணர்வு பலகையை வைத்திருந்தனர். சென்னை போக்குவரத்து காவல்துறை வைத்த அந்த பலகையில் 'ஒய் திஸ் கொலவெறி? கோபப்படாமல் வாகனத்தை ஓட்டுங்கள்' என்ற வாசகம் இருந்தது. இந்தப் பலகையை டெல்லி மற்றும் பெங்களூரு போலீசாரும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்