Skip to main content

ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
 Petition for cancellation of PC Chidambaram's bail dismissed

 

ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்ததை எதிர்த்து சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்