Skip to main content

ஒரே கழிவறை முன் ஏராளமானோரின் புகைப்படம்! தூய்மை இந்தியா பரிதாபங்கள்!!

Published on 20/02/2018 | Edited on 20/02/2018

ஒரே கழிவறையின் முன்பு மக்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை பஞ்சாயத்து நிர்வாகிகள் வாரிச்சுருட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 

கோயம்புத்தூர் மாவட்டம் சூளூர் அருகே உள்ளது கே.மதப்பூர் கிராமம். இந்த கிராமத்தில் 2015 - 2016 காலகட்டத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 158 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ.12ஆயிரம் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

Kovai

 

ஆங்கில இதழ் ஒன்று சமீபத்தில் நடத்திய ஆய்வில், பயனாளர்கள் என்று சொல்லப்படும் யாருக்கும் கழிவறைகள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஐம்பதுக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 

 

புதிதாக கட்டப்பட்ட ஒருசில கழிவறைகள், முன்னரே கட்டப்பட்டிருந்த கழிவறைகள் என அனைத்திலும், தூய்மை இந்தியா என எழுதி அந்தப் பகுதி மக்களை அவற்றின் முன் நிறுத்தி புகைப்படங்களை எடுத்துள்ளனர். பக்கத்து கிராமத்திலிருந்து உறவினர்களின் வீடுகளுக்கு வந்தவர்களையும் நிறுத்தி புகைப்படம் எடுத்தது கொடுமையிலும், கொடுமை. இதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களே ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளன.

 

இந்த மோசடியின் மூலம் பஞ்சாயத்து நிர்வாகிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சில இடைத்தரகர்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்; பயனாளர்கள் விடுத்து. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த செய்தி குறித்து, விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.