Skip to main content

‘நிர்பயா தாயாருக்கு நல்ல உடற்கட்டு!’ - முன்னாள் அமைச்சரின் சர்ச்சைக் கருத்து

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

நிர்பயா விருது வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.

 

கடந்த மார்ச் 9ஆம் தேதி மகளிர் தின சிறப்பு விழாவாக நிர்பயா விருது வழங்கும் விழா பெங்களூருவில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட நிர்பயாவின் பெற்றோர், முன்னாள் அமைச்சரும் மற்றும் முன்னாள் காவல்துறை ஆணையருமான சங்லியானா, ஐ.ஜி.பி. டி.ரூபா, சமூக செயற்பாட்டாளர் அனிதா செரியா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராக குரல்கொடுக்கும் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களுக்கு நிர்பயா விருது வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் கலந்துகொண்டு விருது வழங்கிய முன்னாள் அமைச்சர் சங்லியானா, ‘நிர்பயாவின் தாயாரைப் பார்க்கிறேன். அவருக்கே இவ்வளவு அழகான உடற்கட்டு இருக்கும்போது, நிர்பயா எவ்வளவு அழகாக இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்’ என அனைவரும் முகம்சுழிக்கும் விதமாக பேசினார். மேலும், ‘பாலியல் வன்முறையில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், பின்னர் வழக்கு தொடரவேண்டும். இதன்மூலம் கொல்லப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்’ என சர்ச்சைக்குரிய கருத்தையும் பகிர்ந்தார். அவரது இந்தக் கருத்து விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

தொல்லியல் துறை கொடுத்த ஒரு நாள் சர்ப்ரைஸ்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Women's Day Celebration; Notification issued by Department of Archaeology

இன்று (08.03.2024) உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பல சுற்றுலாத் தலங்களில் இன்று இலவச அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளை பார்வையிடப் பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி அளித்துள்ளது தொல்லியல் துறை. இதனால் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களை பார்வையாளர்கள் இன்று கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

அதேபோல் புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான சித்தன்னவாசலில் இன்று ஒருநாள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் மூவர் கோயில் சித்தன்னவாசலில் எந்தவித கட்டணமும் இன்றி இன்று சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் மாரத்தான்

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Marathon competition to promote fitness among women

 

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களிடையே உடற்தகுதியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் ஐந்து கி.மீ. மாரத்தான் தொடர் ஓட்டம் நேற்று (12.3.2023) நடைபெற்றது. ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட இந்த மாரத்தானில் பல்வேறு வயது பிரிவில் 1,900 பெண்கள் கலந்துகொண்டனர். 18 - 25, 26 - 40 மற்றும் 41 வயதுக்கு மேற்பட்ட மூன்று வயது பிரிவுகளில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி, அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மகாராஷ்டிரா வங்கி மேலாளர் ரூபா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்தோடு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் டீ-சர்ட், சான்றிதழ்களுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன.