Skip to main content

தாஜ்மஹாலை காண புதிய வியூ பாயிண்ட்!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

இந்தியாவில் காதலர்களின் நினைவு சின்னமாக கருதப்படுவது தாஜ்மஹால். உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ் மஹாலை நிலவு ஒளியில் பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு புதிய வியூ பாயிண்டை உத்திரப் பிரதேச அரசு திறந்து வைத்துள்ளது. ''மெஹ்தாப் பாக் தாஜ் வியூ பாய்ண்ட்'' என்று அழைக்கப்படும் இந்த புதிய வியூ பாய்ண்ட் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் இந்த புதிய வியூ பாய்ண்ட் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்படும்.



இதன் நுழைவு கட்டணமாக ஒருவருக்கு 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆக்ரா மேம்பாட்டு ஆணையத்தினால் உருவாக்கப்பட்ட இந்த வியூ பாய்ண்டினை மாநில அமைச்சர் கிராஜ் சிங் துவங்கி வைத்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்