Skip to main content

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் இரண்டு நாள் சிபிஐ காவல் 

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Manish Sisodia remanded in CBI custody for two more days

 

மணீஷ் சிசோடியாவுக்கு மேலும் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த  26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. 

 

இதனைத் தொடந்து கைது செய்யப்பட்ட சிசோடியாவை 4 ஆம் தேதி வரை(இன்று) சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க செல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் கொடுத்த அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் மணீஷ் சிசோடியா. அப்போது சிபிஐ தரப்பிலிருந்து மணீஷ் சிசோடியாவை விசாரிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என முறையிடப்பட்டது. இதனிடையே மணீஷ் சிசோடியாவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது. 

 

 

சார்ந்த செய்திகள்