Skip to main content

கரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி கோரி விண்ணப்பித்த வெளிநாட்டு நிறுவனம்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

JOHNSON&JOHNSON

 

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.

 

இந்தநிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு, இந்தியாவில் உள்நாட்டு பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு அனுமதி வழங்கப்படும் என்பதால், ஜான்சன் & ஜான்சனின் ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்குப் பல்வேறு நாடுகள் அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஒரே ஒரு டோஸை மட்டுமே கொண்டது என்பதால், இத்தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டால், அது இந்திய மக்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்துவதில் உதவும் எனவும் கருதப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்