Skip to main content

இந்தியாவில் 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு இன்று 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 27 ஆயிரத்து 409 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று 34 ஆயிரத்து 113 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 347 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 82 ஆயிரத்து 817 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தினசரி கரோனா சதவீதம் 2.23 சதவீதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்