Skip to main content

இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கரோனா பாதிப்பு!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

CORONA

 

இந்தியாவில் தொடர்ந்து குறைந்த வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது சற்று அதிகரித்துள்ளது. நேற்று  ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 433 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்ட 1008 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 107 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் தினசரி கரோனா உறுதியாகும் சதவீதம் 10.99 ஆக இருந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்