நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு சில வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.