Published on 01/09/2019 | Edited on 01/09/2019
நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் அரசியலை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க தற்போதைய அரசு முயல வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,
![Former Prime Minister Manmohan Singh allegation](http://image.nakkheeran.in/cdn/farfuture/b17CCuP4gPUoElNwH4ebfGaUTZW5nDZPmZXk-3UErbc/1567315809/sites/default/files/inline-images/z40_0.jpg)
மத்திய அரசின் தவறான மேலாண்மையால் இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மந்த நிலைக்கு மோடி அரசே காரணம். கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது இதனால் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.