Skip to main content

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கரோனா பாதிப்பு.... உலக அளவில் 10-ஆவது இடத்தில் இந்தியா!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
f


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 57 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இந்தியாவில் தற்போது வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,086 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 67,749 ஆக உள்ளது. 58,803 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 4,534 பேர் கரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 10 -ஆவது இடத்தில் இருக்கின்றது. அமெரிக்கா முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றது. அங்கு 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்