Skip to main content

குறையும் தொற்று... மீளுமா ஆந்திரா?

Published on 09/10/2020 | Edited on 09/10/2020

 

h

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவிக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்துவந்த ஆந்திராவில் தற்போது கரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 5,145 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 7,44,864 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 6,159 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 31 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 6,66,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்