Skip to main content

இதற்கான பாடத்தை ராகுலுக்கு கற்பிக்க வேண்டும்- அமித்ஷா பேச்சு...

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக அமித்ஷா பங்கேற்று பேசினார்.

 

amitshah

 

அப்போது, இந்திய ராணுவத்தின் தியாகத்தை சந்தேகப்படும் ராகுல்காந்திக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார். மேலும் அவர் பேசுகையில், "பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு, நமது இந்திய சிஆர்பிஎப் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய விமானப் படை பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. மக்கள் அனைவரும் இந்திய விமானப் படையின் இந்த தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ, இந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கிறார். இதன் மூலமாக, நமது ராணுவத்தையும், நமது வீரர்களின் உயிர்த் தியாகத்தையும் அவர் அவமதித்துவிட்டார். இதற்காக, வரும் மக்களவைத்தேர்தலில் ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்