Skip to main content

13 இலக்கத்தில் புதிய மொபைல் எண்களா? வைரலான வதந்தி!

Published on 22/02/2018 | Edited on 22/02/2018

நாடு முழுவதும் மொபைல் எண்கள் தற்போது 10 இலக்கத்தில் உள்ளன. ஆனால், இனி வரப்போகும் மொபைல் எண்களும், ஏற்கெனவே உள்ள மொபைல் எண்களும் 13 இலக்க எண்களாக மாற்றப்படப் போகின்றன. அதற்கான வேலைகள் இனிதே தொடங்கிவிட்டதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

 

தவறாக புரிந்து கொள்ளப்பட்ட செய்தி

 

மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில்தான் இந்த 13 இலக்க எண் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது, மெஷின் 2 மெஷின் தொடர்புக்கு இனி 13 இலக்க எண்களே பயன்படுத்தப்படும். இந்த முடிவு வரும் ஜூலை 1ஆம் தேதி அமல்ப்படுத்தப்படும். அக்டோபர் 1ஆம் தேதி இதற்கான வேலைகள் தொடங்கி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என அந்தக் கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது. இந்தத் தகவல் அரைகுறையாக புரிந்துகொள்ளப்பட்டு, இனி மொபைல் எண்களுக்கு 13 இலக்க எண்கள்தான் ஒதுக்கப்படும் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலானது. 

 

M2M

 

மெஷின் 2 மெஷின் என்றால்..

 

இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IOT)ல் பயன்படுத்தப்படும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் இந்த மெஷின் 2 மெஷின். இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் மூலமாக உலகின் எந்த மூலையில் உள்ள சாதனங்களையும் உட்கார்ந்த இடத்திலேயே கட்டுப்படுத்த முடியும். இப்படி ஒவ்வொரு இயந்திரத்திற்கும் இடையே தகவல் பரிமாற்றம் செய்ய இணைய வசதி அவசியம். இதற்காக பயன்படுத்தப்படும் மெஷின் 2 மெஷின் சிம் கார்டுகளின் எண்களைத்தான் தற்போது 13 இலக்கமாக மாற்றியிருக்கிறார்கள். மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிவிப்பை மெஷின் 2 மெஷின் சேவையை வழங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பின்பற்றவுள்ளன. ‘இதில் வதந்திகளுக்கு இடமில்லை. சாதாரண மொபைல் சேவை எண்களுக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை’ என இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்துள்ளதை இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

ஹோட்டல் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

6 people were arrested for attacking the hotel worker and snatching his cell phone

 

மேற்குவங்க மாநிலம் மீனிபூர் நகரைச் சேர்ந்தவர் ரஹிம்ஷா (36). இவர் ஈரோடு சத்தி ரோடு ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். ரஹிம்ஷா தனது நண்பருடன் சம்பவத்தன்று பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மது அருந்திக் கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் ரஹிம்ஷா தனது பாக்கெட்டில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தபோது பாக்கெட்டில் இருந்த அவரது செல்போன் கீழே விழுந்துள்ளது. அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் ரஹிம்ஷாவின் செல்போன் எடுத்துக் கொண்டாராம். அது குறித்து ரஹிம்ஷா அவரிடம் கேட்டபோது அவர்கள் 6 பேரும் சேர்ந்து ரஹிம்ஷாவை தாக்கியுள்ளது. அதைக் கண்ட அருகில் இருந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அப்பகுதியினர் அவர்களைத் தடுக்க வந்தவுடன் ரஹிம்ஷாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

 

இது குறித்து ரஹிம்ஷா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஹிம்ஷாவை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற எல்லப்பாளையம், ஆயப்பாளியை சேர்ந்த சந்தோஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (24), பாரத் (20), குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (27) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.