Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: தம்பிதுரை

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
Thambidurai


 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். 
 

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரி வாரியம் அமைக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடரிலும் போராட்டம் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். நாடாளுமன்றத்தை முடக்குவோம். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்.  
 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அறவழி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. 1974 முதல் மத்தியில் உள்ள எந்த அரசும் தமிழகத்துக்கு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் ஆளுநரை விட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. ஆய்வு குறித்து ஆளுநரிடம் கேட்ட போது, மக்களை சந்திக்கவே ஆய்வு என கூறினார். இவ்வாறு தம்பிதுரை பேட்டி அளித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலை ஒழிப்பதே அதிமுகவின் நோக்கம்..” - எம்.பி. தம்பிதுரை 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

"The aim of ADMK is to eliminate corruption." - MP Thambidurai
கோப்புப் படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு செய்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், பூத் கமிட்டி  திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளருமான தம்பிதுரை கலந்துகொண்டு பூத் கமிட்டி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய தம்பிதுரை, “தேர்தல் நேரத்தில் மட்டும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுகின்றனர். எம்.ஜி.ஆர் வேறு மற்ற நடிகர்கள் வேறு. நடிகர்களை நம்பி அரசியலுக்கு வந்தவர்கள் இன்று காணாமல் போய் உள்ளனர் என பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

திமுகவில் கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குடும்ப ஆட்சி நடத்திய காங்கிரஸ் இன்று காணாமல் போய்விட்டது. திமுக என்ற கட்சியும் விரைவில் காணாமல் போகும். அதிமுகவின் நோக்கம் தமிழகத்தில் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் ஒழிப்பது மட்டுமே” என்றார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அதிமுக பொறுப்பாளர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

“மோடிக்கு குடும்பம் இல்லை... செங்கோட்டை தான் வீடு” - கார்கேவுக்கு தம்பிதுரை பதில் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “என்னுடைய இரண்டாவது பிரதமர் பதவிக் காலத்தில் 10வது முறையாக உரையாற்றுகிறேன். இந்தியா அடைந்துள்ள சாதனைகளை அடுத்த ஆண்டு மீண்டும் இதே இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மக்களிடம் பட்டியலிடுவேன்” என்று தெரிவித்தார். 

 

இதற்கு  காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தலில் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் உள்ளது. மீண்டும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவேன் என்று பிரதமர் கூறுவது அவரது ஆணவத்தைக் காட்டுகிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளைப் பற்றி விமர்சனம் செய்பவரால் நாட்டை எப்படி கட்டி எழுப்ப முடியும். அடுத்த ஆண்டு அவர் மீண்டும் தேசியக் கொடியை ஏற்றுவார். ஆனால், அதை அவரது வீட்டில் செய்வார்” என்று தெரிவித்தார்.

 

"Modi has no family.. Red Fort is his home" - Thambidurai's answer to Kharge

 

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்துக்கு பதில் அளித்த அதிமுக எம்.பி தம்பிதுரை, “பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம். செங்கோட்டைதான் அவரது வீடு. அதனால் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தான் தேசியக் கொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரியாகத்தான் சொல்லியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.