Skip to main content

நான், எப்படி கமல்ஹாசன் கட்சியில் சேர அப்ளை செய்வேன்? ஏமாற்று வேலை கூடாது..! - தமிழிசை பேட்டி

Published on 14/03/2018 | Edited on 14/03/2018


தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி கமல்ஹாசன் கட்சியில் சேர அப்ளை செய்வேன்? என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றுது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் முன்னதாக செய்தியாளர்களிடம் பேசினார்,

"இன்றையச் சூழலில் நாகரீகமான அரசியலை, வளர்ச்சி அரசியலை, ஊழலற்ற அரசியலை கொடுக்கும் தகுதியை பா.ஜ.க. பெற்றுள்ளது. புதியவர்கள் அரசியலுக்கு வருவதாகக் கூறுகின்றனர். ஆனால், வருவார்களா எனத் தெரியவில்லை. இவர்களால் மக்களுக்கு எதையும் செய்ய முடியாது.

டி.டி.வி. தினகரன் தமிழகம் தலைநிமிர, புதிய கட்சி துவங்கப்போவதாக அறிவித்துள்ளார். சிறையில் இருப்பவர்களின் படத்தை போட்டுவிட்டு, இவர்கள் எப்படி தமிழகத்தை தலை நிமிர வைப்பார்கள் எனத் தெரியவில்லை. தமிழகத்தை தலைநிமிர வைக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டுள்ளோம் என எனக்கு தகவல் வருகிறது. இது எப்படி என தெரியவில்லை. நான் அதில் அப்ளை செய்ததாகக் கூறுகின்றனர். தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரான நான், எப்படி அதில் அப்ளை செய்வேன்? அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அதை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். ஏமாற்று வேலை செய்யக்கூடாது. நாகரீகமற்ற அரசியல் தேவையில்லை. நாங்கள் நேர்மையான அரசியல் நடத்துகிறோம்.

நோட்டு கொடுத்து ஓட்டு வாங்குபவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தேனி, குரங்கணி காட்டுத் தீ சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையேற்றத்தை தமிழக அரசு வரைமுறைப்படுத்த வேண்டும். பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும். பாஜகவுக்கு எதிராக சோனியா, 20 கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இனி எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், பாஜகவின் உறுதித் தன்மையை குலைக்கமுடியாது.

காங்., பாஜக, அல்லாத கூட்டணிக்காக ஸ்டாலினிடம் மம்தா பேசுகிறார். காங்கிரஸ் கூட்டிய கூட்டத்தில் கனிமொழி கலந்து கொள்கிறார். உண்மையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக உள்ளதா? என்பதை தெரியப்படுத்த வேண்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டது" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.