Skip to main content

‘கச்சத்தீவு, மீனவர் பிரச்னை; தமிழக முதல்வருக்கு பதில்’ - மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
answer to CM MK Stalin says Union Minister for issue of Kachchathivu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையிலெடுத்து காங்கிரசையும்,  திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “கடந்த 1974 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் ஒரு கடல் எல்லையை வரைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் கடல் எல்லையை வரைவதில் கச்சத்தீவு இலங்கையின் எல்லையில் இருக்குமாறு வரையப்பட்டன. காங்கிரஸும், தி.மு.க.வும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல அணுகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 6 ஆயிரத்து 184 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். 1175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இன்று விவாதிக்கும் பிரச்சனையின் பின்னணி இதுதான்.

கடந்த ஐந்தாண்டுகளில் கச்சத்தீவு பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. நாடாளுமன்ற கேள்விகள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் இது பற்றி வந்துள்ளன. அப்போதைய தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வரிடம், இந்த பிரச்சனைக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்பதை எனது பதிவு காட்டுகிறது. இது திடீரென்று தோன்றிய பிரச்சனை அல்ல. இது ஒரு நேரடி பிரச்சனை. இது நாடாளுமன்றத்திலும், தமிழக வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதற்கு அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. இன்றைய மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய சூழல் இருந்தாலும், இதற்கு வரலாறே இல்லை, இது இப்போதுதான் நடந்திருக்கிறது.இவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படித்தான் அவர்கள் அதை முன்னிறுத்த விரும்புகிறார்கள்.

இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். யார் மறைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நிலை எப்படி வந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இன்று, பொதுமக்கள் தெரிந்து கொள்வதும், மக்கள் தீர்ப்பளிப்பதும் முக்கியம். இந்த பிரச்சனை பொதுமக்களின் பார்வையில் இருந்து நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள், படகுகள் இன்னும் பறிமுதல் செய்யப்படுகிறது. இன்னும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்படுகிறது. அதுவும் இதனைச் செய்த இரு கட்சிகளால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுகிறது. கைது செய்யப்பட்டார், எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். சென்னையில் இருந்து அறிக்கை கொடுப்பது மிகவும் நல்லது, ஆனால் வேலை செய்பவர்கள் நாங்கள்தான்.

நாங்கள் 1958 மற்றும் 1960 பற்றி பேசுகிறோம். குறைந்த பட்சம் மீன்பிடி உரிமையாவது எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வழக்கின் முக்கிய நபர்கள் விரும்பினர். கச்சத்தீவு 1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1976 இல் மீன்பிடி உரிமை வழங்கப்பட்டது. ஒன்று, மிக அடிப்படையான தொடர்ச்சியான (அம்சம்) இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியம். அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதுதான். கச்சத்தீவு குறித்து கடந்த மே 1961 இல் நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான எங்கள் கோரிக்கையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். எனவே நேருவுக்கு, இது ஒரு குட்டித் தீவு. அதற்கு முக்கியத்துவம் இல்லை, அவர் அதை ஒரு தொல்லையாகப் பார்த்தார். இலங்கைக்கு எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்